ஒன்றா ரெண்டா பாடல் வரிகள்
குழு : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்
பெண் : ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா ஆண் : சொல்லு
பெண் : ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா அன்பே இரவை
கேட்கலாம் விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
பெண் : என் கனவில்
ஆ ஹா… நான் கண்ட
ஆ ஹா… நாளிது தான்
கலாபக்காதலா பார்வைகளால்
ஆ ஹா… பல கதைகள் ஆ ஹா
பேசிடலாம் கலாபக்காதலா
பெண் : ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா அன்பே இரவை
கேட்கலாம் விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
பெண் : பெண்களை
நிமிர்ந்து பார்த்திட
உன் இனிய கண்ணியம்
பிடிக்குதே கண்களை
நேரா பாத்து தான் நீ பேசும்
தோரணை பிடிக்குதே
பெண் : தூரத்தில் நீ
வந்தாலே என் மனசில்
மழையடிக்கும் மிகப்பிடித்த
பாடல் ஒன்றை உதடுகளும்
முணுமுணுக்கும்
பெண் : மந்தகாசம் சிந்தும்
உந்தன் முகம் மரணம்
வரையில் என் நெஞ்சில்
தங்கும் உனது கண்களில்
எனது கனவினை காண
போகிறேன்
பெண் : ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா அன்பே இரவை
கேட்கலாம் விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
குழு : …………………………
பெண் : சந்தியாக் கால
மேகங்கள் உன் வானில்
ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ
நெஞ்சிலே உன் நடையின்
சாயலே தோணுதே
பெண் : நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளி வழிய
நீ வருவாய் என நின்றேன்
பெண் : உன்னால் என்
நெஞ்சில் ஆணின் மனம்
நானும் சொந்தம் என்ற
எண்ணம் தரும் மகிழ்ச்சி
மீறுதே வானைத் தாண்டுதே
சாகத் தோன்றுதே தோன்றுதே
பெண் : அன்பே இரவை
கேட்கலாம் இரவை
கேட்கலாம் விடியல்
தாண்டியும் இரவே நீளுமா
இரவே நீளுமா
பெண் : என் கனவில்
ஆ ஹா… நான் கண்ட
ஆ ஹா… நாளிது தான்
கலாபக்காதலா பார்வைகளால்
ஆ ஹா… பல கதைகள் ஆ ஹா
பேசிடலாம் கலாபக்காதலா
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

No comments:
Post a Comment