ஆசை ஆசையாய் இருகிறதே பாடல் வரிகள்
குழு : ச ரி ப ம க ரி
ச ரி ச நீ ச ச ரி ப ம
க ரி ச ரி ச நீ ச
ஆண் : ஆசை ஆசையாய்
இருக்கிறதே இதுபோல்
வாழ்ந்திடவே பாச பூமழை
பொழிகிறதே இதயங்கள்
நனைந்திடவே
ஆண் : நம்மை காணுகிற
கண்கள் நம்மோடு சேர
கெஞ்சும் சேர்ந்து வாழுகின்ற
இன்பம் அந்த சொர்க்கம்
தன்னை மிஞ்சும்
ஆண் : ஒரு நாள் கூட
இங்கு வரமாகும் உயிர்
எங்கள் வீடாகும் சுகமாய்
என்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்
குழு : ச ரி ப ம க ரி
ச ரி ச நீ ச
ஆண் : ஆசை ஆசையாய்
இருக்கிறதே இதுபோல்
வாழ்ந்திடவே பாச பூமழை
பொழிகிறதே இதயங்கள்
நனைந்திடவே
குழு : ஆஆ….. ஆஆ……
ஆண் : ஓ நம் தாயின்
முகத்தில் ஒரு கோடி
கடவுள் தரிசனம் நாங்கள்
பார்த்திடுவோம்
ஆண் : தீபங்கள் கோடி
நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல
மாற்றிடுவோம்
ஆண் : அன்னைக்கு
பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும்
நேரத்திலும் சொந்தங்கள்
சேர்ந்திருப்போம் அனைவரின்
அன்பில் ஆயுளும் கூடிடுமே
குழு : ச ரி ப ம க ரி
ச ரி ச நீ ச ச ரி ப ம
க ரி ச ரி ச நீ ச
ஆண் : ஆசை ஆசையாய்
இருக்கிறதே இதுபோல்
வாழ்ந்திடவே பாச பூமழை
பொழிகிறதே இதயங்கள்
நனைந்திடவே
ஆண் : ஓ பல நூறு வண்ணம்
ஒன்றாக சேரும் ஓவியம் போல
சேர்ந்திருப்போம்
ஆண் : வரலாறு எல்லாம்
நம் பேரை நாளை சொல்வதை
போல வாழ்ந்திருப்போம்
ஆண் : எங்களுக்குள்ளே
வளைந்திடுவோம் நாணலை
போல்தானே நம் ஒற்றுமை
காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடை மழையாக பெய்யும்
சந்தோசம்
குழு : { ச ரி ப ம க ரி
ச ரி ச நீ ச ச ரி ப ம
க ரி ச ரி ச நீ ச } (2)

No comments:
Post a Comment