ஓ மனமே ஓ மனமே பாடல் வரிகள்
ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
ஆண் : மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
ஆண் : மேகத்தை இழுத்து
போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட
ஆசையடி நம் ஆசை
உடைத்து நார் நாராய்க்
கிழித்து முள்ளுக்குள்
எரிந்தது காதலடி
ஆண் : கனவுக்குள்ளே
காதலைத் தந்தாய் கணுக்க
தோறும் முத்தம் கனவு
கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
ஆண் : துளைகள் இன்றி
நாயனமா தோல்விகள்
இன்றி பூரணமா
ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
குழு : …………………………
ஆண் : இன்பத்தில் பிறந்து
இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன்
யாருமில்லை துன்பத்தில்
பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
ஆண் : இன்பம் பாதி
துன்பம் பாதி இரண்டும்
வாழ்வின் அங்கம் நெருப்பில்
வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
ஆண் : தோல்வியும் கொஞ்சம்
வேண்டுமடி வெற்றிக்கு அதுவே
ஏணியடி
ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
ஆண் : மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே

No comments:
Post a Comment