1.
முஸ்தபா முஸ்தபா பாடல் வரிகள்
ஆண் : {முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரிமுஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா} (2)
ஆண் : டே பை டே…. டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
ஆண் : முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
பெண் : …………………………………
ஆண் : ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
ஜூனியருக்கும் சீனியருக்கும்
கல்லூரிச் சாலை எங்கும்
ராகிங் நடக்கும்
ஆண் : ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராகிங் கூட
பாதை வகுக்கும்
ஆண் : நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு
நட்புக்கில்லையே
ஆண் : துன்பம் வரலாம் இன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை
முற்றுப்புள்ளியே
குழு : {ஒஹோ ஓஓஒ….ஒஹோ ஓஓஒ….
ஒஹோ ஓஓஒ….} (2)
ஆண் : முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
பெண் : காலம் நம் தோழன் முஸ்தபா
ஆண் : டே பை டே…. டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
பெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
ஆண் : முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
ஆண் : இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள்
வேடந்தாங்கல்
ஆண் : கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள்
கோடைக்கானல்
ஆண் : கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை
தென்றல் சாட்சி
ஆண் : நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள்
ஃபேர்வல் பார்ட்டி
குழு : {ஒஹோ ஓஓஒ….ஒஹோ ஓஓஒ….
ஒஹோ ஓஓஒ….} (2)
ஆண் : {முஸ்தபா முஸ்தபா
டோண்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
பெண் : காலம் நம் தோழன் முஸ்தபா
ஆண் : டே பை டே…. டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
பெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா} (2)
2.
நல்ல நண்பன் பாடல் வரிகள்
ஆண் : நல்ல நண்பன்
வேண்டும் என்று அந்த
மரணமும் நினைகின்றதா
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல
துடிக்கின்றதா
ஆண் : இறைவனே
இறைவனே இவன்
உயிர் வேண்டுமா
எங்கள் உயிர் எடுத்துகொள்
உனக்கது போதுமா
ஆண் : இவன் எங்கள்
ரோஜா செடி அதை
மரணம் தின்பதா
இவன் சிரித்து பேசும்
ஒலி அதை வேண்டினோம்
மீண்டும் தா
ஆண் : உன் நினைவின்
தாழ்வாரத்தில் எங்கள்
குரல் கொஞ்சம் கேட்க
வில்லையா மனமென்னும்
மேல் வானத்தில் எங்கள்
நியாபகங்கள் பூக்கவில்லையா
ஆண் : ஆ ஆ ஆ ஓ ஹோ
ஆண் : இறைவனே
இறைவனே உனக்கில்லை
இரக்கமா தாய் இவள்
அழுகுரல் கேட்ட பின்பும்
உறக்கமா
ஆண் : வா நண்பன்
வா நண்பா தோள்களில்
சாயவா வாழ்ந்திடும்
நாள் எல்லாம் நான்
உன்னை தாங்கவா
3. தோழா தோழா பாடல் வரிகள்
பெண் : தோழா தோழா
கனவு தோழா தோழா
தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சுக்கணும்
நட்ப பத்தி நாமும் பேசி
தீர்த்துக்கணும் உன்ன நான்
புரிஞ்சுக்கணும் ஒன்னொன்னா
தெரிஞ்சிக்கணும்
பெண் : ஆணும் பெண்ணும்
பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும்
தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
பெண் : நட்புக்குள் பொய்கள்
கிடையாது நட்புக்குள் தவறுகள்
நடக்காது நட்புக்குள் தன்னலம்
இருக்காது நட்புக்கு ஆண் பெண்
தெரியாது நட்பு என்னும் நூல்
எடுத்து பூமியை கட்டி நீ நிறுத்து
பெண் : நட்பு நட்புதான்
காதல் காதல்தான் காதல்
மாறலாம் நட்பு மாறுமா
ஆண் : காதல் ஒன்றும்
தவறே இல்லை காதல்
இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறியப்பின் சொல்லிய உண்மை
பெண் : நீயும் நானும்
பழகுறோமே காதல்
ஆகுமா இது ஆயுள்
முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா
பெண் : தோழா தோழா
கனவு தோழா தோழா
தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சுக்கணும்
பெண் : …………………………..
ஆண் : நீயும் நானும்
வெகு நேரம் மனம் விட்டு
பேசி சிரித்தாலும் பிரியும்
பொழுதில் சில நொடிகள்
மௌனம் கொள்வது ஏன் தோழி
ஆண் : புரிதலில் காதல்
இல்லையடி பிரிதலில்
காதல் சொல்லுமடி காதல்
காதல்தான் நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல்
வளருமே
பெண் : பிரிந்து போன
நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை
சொல்லும் பிரியமான
காதலும் கூட பிரிந்தபின்
ரணமாய் கொல்லும்
ஆண் : ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்
பெண் : ஆன்.. இது கரெக்ட்
ஆண் : அது ஆயுள் முழுதும்
கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்
பெண் : தோழா தோழா
கனவு தோழா தோழா
தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சுக்கணும்
நட்ப பத்தி நாமும் பேசி
தீர்த்துக்கணும்
ஆண் : உன்ன நான்
புரிஞ்சுக்கணும்
ஒன்னொன்னா
தெரிஞ்சிக்கணும்
பெண் : ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும்
கலங்கப்படாம பார்த்துக்கலாம்
ஆண் & பெண் : { ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் } (2)
4. என் பிரெண்டை போல பாடல் வரிகள்
ஆண் : { என் ஃபிரண்ட போல
யாரு மச்சான் அவன் ட்ரெண்ட
எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என்ன எண்ணி எண்ணி ஏங்க
வச்சான் நட்பால நம்ம நெஞ்ச
தச்சான் நம் கண்ணில் நீர
பொங்க வச்சான் } (2)
ஆண் : தோழனின் தோள்களும்
அன்னை மடி அவன் தூரத்தில்
பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள
படி என்றும் நட்புதான் உயர்ந்தது
பத்து படி
ஆண் : உன் நட்பை நாங்கள்
பெற்றோம் அதனாலே யாவும்
கற்றோம் மேலே மேலே
சென்றோம் வான் மேகம்
போலே நின்றோம்
ஆண் : புது பாதை நீயே
போட்டு தந்தாய் ஏன் பாதி
வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயை தேடும் பிள்ளை
ஆனோம் நீ இல்லை என்றால்
எங்கே போவோம்
ஆண் : என் ஃபிரண்ட போல
யாரு மச்சான் அவன் ட்ரெண்ட
எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என்ன எண்ணி எண்ணி ஏங்க
வச்சான் நட்பால நம்ம நெஞ்ச
தச்சான் நம் கண்ணில் நீர
பொங்க வச்சான்
மச்சான்
5. ஈஸ்வரா வானும் பாடல் வரிகள்
ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
ஆண் : மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
ஆண் : புதிய மேகங்கள்
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும்
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா..
ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
குழு : ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஆண் : கிளியின் சிறகு கடன் கேட்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : நீல வானத்தை துவைக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : நிலவை பூமிக்குள் இழுக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : கோட்டை தேவையில்லை
ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
செண்ட்ரல் கவிழ்ந்தாலும்
அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா
ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
குழு : ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஆண் : காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : பிரியமான பெண்ணை ரசிக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : மாடர்ன் உலகத்திலே
எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும்
என்னாலும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா..
ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
ஆண் : மானும் புலியும்தேநீர்
பருகுது உன்னால் ஈஸ்வரா
ஆண் : மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
ஆண் : புதிய மேகங்கள்
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும்
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா..
குழு : ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
6.Meesakaara
Nanba Song Lyrics in Tamil
ஆண் : { மீசக்கார நண்பா
உனக்கு ரோஷம்
அதிகம் டா } (2)
ரோஷம் அதிகம் டா
அத விட பாசம்
அதிகம் டா
ஆண் : நம்ம பழகினத
மறக்கலயே அந்த பருவம்
இப்போ கிடைக்கலையே
அந்த காட்சிகளுக்கு
நரையில்லயே இன்னும்
கண்ண விட்டுத்தான்
மறையலயே
ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்
டா
ஆண் : ………………………
ஆண் : அந்த ஆத்தங்கரைய
கேட்டு பாரு மீன் புடிச்ச கத
அது சொல்லும்
ஆண் : அந்த பண்ண
மேட்ட கேட்டு பாரு பால்
கறந்த கத அது சொல்லும்
ஓய்
ஆண் : அந்த சோள காட்ட
கேட்டு பாரு கொடி புடிச்ச
கத அது சொல்லும்
ஆண் : அந்த டூரின் டாக்ஸிச
கேட்டு பாரு படம் பார்த்த கத
அது சொல்லும்
ஆண் : கர்ணம் போட்டு
கிணத்துல குதிச்ச
நினைவுகள் மலருது
மனசுக்குள் குளிருது
ஆண் : கம்பங்கூழு
குடிச்சிடத்தானே
உதடுகள் துடிக்குது
மீசையும் தடுக்குது
ஆண் : பழகினத மறக்கலயே
அந்த பருவம் இப்போ
கிடைக்கலையே அந்த
காட்சிகளுக்கு நரையில்லயே
இன்னும் கண்ண விட்டுத்தான்
மறையலயே
ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்
டா டேய் டேய் டேய்
ஆண் : …………………………
ஆண் : பெத்த அப்பன
போலே அக்கறை வச்சி
செஞ்ச சேவைக்கெல்லாம்
விலையில்லயே
ஆண் : அந்த அன்பு
நெறைஞ்ச புள்ள பாசம்
அட உன்ன போல தான்
எனக்கில்லையே
ஆண் : இந்த விதி முழுக்க
தோரணம் கட்டி கண்ணு
முழிச்சதெல்லாம் எதுக்காக
ஆண் : நான் பெத்த
பொண்ணுதான் வாழ
வேண்டி நீ உழைச்சதெல்லாம்
எனக்காக
ஆண் : கர்ணன் போலே
கடமைய மதிச்சு தினம்
தினம் உழைச்சவன்
வேர்வைய வடிச்சவன்
ஆண் : பாட்டுக்காரன்
பாரதி சொன்ன கண்ணண
போலவே எனக்கிங்கு
பொறந்தவன்
ஆண் : கண்ணு ரெண்டுதான்
கலங்குதய்யா என்ன
புண்ணியம் செஞ்சேன்
உன்னை அடைய
ஆண் : நன்றி கடன்
தீர்க்க என்ன கொடுப்பேன்
உன் வேலைக்காரனாக
வந்து பொறப்பேன்
ஆண் : { மீசக்கார நண்பா
உனக்கு ரோஷம்
அதிகம் டா } (2) டேய்
ரோஷம் அதிகம் டா
அத விட பாசம் அதிகம்
டா
ஆண் : நம்ம பழகினத
மறக்கலயே அந்த பருவம்
இப்போ கிடைக்கலையே
அந்த காட்சிகளுக்கு
நரையில்லயே இன்னும்
கண்ண விட்டுத்தான்
மறையலயே
ஆண் : மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம்
அதிகம் டா






No comments:
Post a Comment