பேர் வச்சாலும் வைக்காம பாடல் வரிகள்
ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
பெண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா
ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்…..
ஆண் : கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
ஏறலாம் ஏறலாம்
பெண் : காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்
சேரலாம் சேரலாம்
ஆண் : மந்தாரை செடியோரம்
கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்
பெண் : சந்தோஷம் பெறலாமா
ஹோய் அதில் சந்தேகம் வரலாமா
ஆண் : பந்தக்கால் நட்டு
பட்டுப்பாய் இட்டு
மெல்லதான் அள்ளத்தான்
கிள்ளத்தான் அப்பப்பப்பா
பெண் : வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
ஆண் : ஹேய்
பெண் : அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
ஆண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா
பெண் : வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண் : காதல் மன்னனா நீயும் கண்ணனா
நாளும் ஓர் அலங்காரமா
ஆண் : தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான்
தோன்றினேன் அவதாரமா
பெண் : கல்யாணம் முடிக்காது
நம்ம கச்சேரி தொடங்காது
ஆண் : கல்லாலே அணை போட்டு
ஹே இந்த காவேரி அடங்காது
பெண் : அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பா
ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
ஆண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா
பெண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
ஆண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

No comments:
Post a Comment