Amma
song
1. Aasa Patta
Ellathayum Song Lyrics in Tamil
ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
குழு (பெண்கள்) : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
ஆண் : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்…
தாய் போலே தாங்க முடியுமா…
குழு (பெண்கள்) : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்…
தாய் போலே தாங்க முடியுமா…
ஆண் : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா…
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…
குழு (பெண்கள்) : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா…
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…
ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா நீயும்…
—BGM—
ஆண் : பட்டினியா கெடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா…
பால் குடிக்கும் பிள்ளை முகம் பாா்த்தே பசி மறப்பா…
இளவட்டம் ஆன பின்னும் எண்ணெய் தேச்சு குளிக்க வைப்பா…
உச்சி முதல் பாதம் வர உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா…
ஆண் : நெஞ்சிலே நடக்க வைப்பா…
நிலாவ பிடிக்க வைப்பா…
பிஞ்சு விரல் நகம் கடிப்பா…
பிள்ளை எச்சு சோறு தின்பா…
ஆண் : பல்லு முளைக்க நெல்லு முனையால்…
மெல்ல மெல்லதான் கீரி விடுவா…
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா
பெண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
--BGM--
ஆண் : மண்ணில் ஒரு செடி மொளைச்சா…
மண்ணுக்கு அது பிரசவம்தான்…
உன்னை பெற துடி துடிச்சா…
அன்னைக்கு அது பூகம்பம்தான்…
ஆண் : சூரியன சுத்திகிட்டு தன்னை சுத்தும் பூமி அம்மா…
பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்து கொள்ளும் தாய்மை அம்மா…
கர்ப்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா…
பேதை போல் அவள் இருப்பாள் மேதையாய் உனை வளர்ப்பா…
ஆண் : என்ன வேண்டும் இனி உனக்கு…
அன்னை மடியில் சொர்கம் இருக்கு…
என்ன வேண்டும் இனி உனக்கு…
அன்னை மடியில் சொர்கம் இருக்கு…
2. Aarariraro Song Lyrics in Tamil
ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…
ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து
ஆண் : வாழும் காலம் யாவுமே…
தாயின் பாதம் சொர்க்கமே…
வேதம் நான்கும் சொன்னதே…
அதை நான் அறிவேனே…
ஆண் : அம்மா என்னும் மந்திரமே…
அகிலம் யாவும் ஆள்கிறதே…
ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…
—BGM—
ஆண் : வோ் இல்லாத மரம்போல் என்னை…
நீ பூமியில் நட்டாயே…
ஊா் கண் எந்தன் மேலே பட்டால்…
உன் உயிர் நோக துடித்தாயே…
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்…
நீ சொல்லி தந்தாயே…
ஆண் : பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்…
வழி நடத்திச் சென்றாயே…
உனக்கே ஓா் தொட்டில் கட்டி…
நானே தாயாய் மாறிட வேண்டும்…
ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…
—BGM—
ஆண் : தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்…
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா…
மண் பொன் மேலே ஆசை துறந்த…
கண் தூங்காத உயிர் அல்லவா…
ஆண் : காலத்தின் கணக்குகளில்…
செலவாகும் வரவும் நீ…
சுழல்கின்ற பூமியின் மேலே…
சுழலாத பூமியும் நீ…
ஆண் : இறைவா நீ ஆணையிடு…
தாயே எந்தன் மகளாய் மாற…
ஆண் : ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து…
3. Kangal Neeye Song Lyrics in Tamil
பெண் : கண்கள் நீயே… காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
பெண் : வண்ணம் நீயே… வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…
பெண் : பல நாள் கனவே…
ஒரு நாள் நனவே…
ஏக்கங்கள் தீா்த்தாயே…
பெண் : எனையே பிழிந்து…
உனை நான் எடுத்தேன்…
நான் தான் நீ வேறில்லை…
பெண் : முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தால்…
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே…
இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால்…
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே…
பெண் : கண்கள் நீயே…
காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
பெண் : வண்ணம் நீயே…
வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…
—BGM—
பெண் : இந்த நிமிடம் நீயும் வளா்ந்து…
என்னை தாங்க ஏங்கினேன்…
அடுத்தக்கணமே குழந்தையாக என்றும்…
இருக்க வேண்டினேன்….
பெண் : தோளில் ஆடும் சேலை…
தொட்டில்தான் பாதிவேளை…
பெண் : பலநூறு மொழிகளில் பேசும்…
முதல் மேதை நீ…
இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன்…
ஈடில்லா என்மகன்…
பெண் : ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
பெண் : எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்…
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்…
எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்…
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே…
—BGM—
பெண் : என்னை விட்டு இரண்டு எட்டு…
தள்ளிப் போனால் தவிக்கிறேன்…
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து…
கருவில் வைக்க நினைக்கிறேன்…
பெண் : போகும் பாதை நீளம்…
கூரையாய் நீலவானம்…
பெண் : சுவா் மீது கிறுக்கிடும் போது…
ரவிவா்மன் நீ…
பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ…
நான் கொள்ளும் கா்வம் நீ…
—BGM—
பெண் : கடல் ஐந்தாறு…
மலை ஐநூறு…
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை…
பெண் : உடல் செவ்வாது…
பிணி ஒவ்வாது…
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை…
பெண் : கண்கள் நீயே…
காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
பெண் : வண்ணம் நீயே…
வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…
—BGM—



No comments:
Post a Comment