Wednesday, 14 July 2021

Amma song lyrics in tamil

 

Amma song

1. Aasa Patta Ellathayum Song Lyrics in Tamil



ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

குழு (பெண்கள்) : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

ஆண் : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியுமா

குழு (பெண்கள்) : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியுமா

ஆண் : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா

குழு (பெண்கள்) : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா

ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும்

—BGM—

ஆண் : பட்டினியா கெடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பாா்த்தே பசி மறப்பா
இளவட்டம் ஆன பின்னும் எண்ணெய் தேச்சு குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வர உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா

ஆண் : நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவ பிடிக்க வைப்பா
பிஞ்சு விரல் நகம் கடிப்பா
பிள்ளை எச்சு சோறு தின்பா

ஆண் : பல்லு முளைக்க நெல்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீரி விடுவா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா

பெண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

--BGM--

ஆண் : மண்ணில் ஒரு செடி மொளைச்சா
மண்ணுக்கு அது பிரசவம்தான்
உன்னை பெற துடி துடிச்சா
அன்னைக்கு அது பூகம்பம்தான்

ஆண் : சூரியன சுத்திகிட்டு தன்னை சுத்தும் பூமி அம்மா
பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்து கொள்ளும் தாய்மை அம்மா
கர்ப்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பேதை போல் அவள் இருப்பாள் மேதையாய் உனை வளர்ப்பா

ஆண் : என்ன வேண்டும் இனி உனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்கு

 

 

2. Aarariraro Song Lyrics in Tamil


 

ஆண் : ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

ஆண் : ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

ஆண் : வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே

ஆண் : அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

ஆண் : ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

—BGM—

ஆண் : வோ் இல்லாத மரம்போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
ஊா் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே

ஆண் : பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓா் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

ஆண் : ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

—BGM—

ஆண் : தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா

ஆண் : காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ

ஆண் : இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற

ஆண் : ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

 

3. Kangal Neeye Song Lyrics in Tamil


 

பெண் : கண்கள் நீயேகாற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ

பெண் : வண்ணம் நீயேவானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

பெண் : பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீா்த்தாயே

பெண் : எனையே பிழிந்து
உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை

பெண் : முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

பெண் : கண்கள் நீயே
காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ

பெண் : வண்ணம் நீயே
வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

—BGM—

பெண் : இந்த நிமிடம் நீயும் வளா்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக என்றும்
இருக்க வேண்டினேன்….

பெண் : தோளில் ஆடும் சேலை
தொட்டில்தான் பாதிவேளை

பெண் : பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன்
ஈடில்லா என்மகன்

பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பெண் : எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்
எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

—BGM—

பெண் : என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்

பெண் : போகும் பாதை நீளம்
கூரையாய் நீலவானம்

பெண் : சுவா் மீது கிறுக்கிடும் போது
ரவிவா்மன் நீ
பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ
நான் கொள்ளும் கா்வம் நீ

—BGM—

பெண் : கடல் ஐந்தாறு
மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை

பெண் : உடல் செவ்வாது
பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

பெண் : கண்கள் நீயே
காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ

பெண் : வண்ணம் நீயே
வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

—BGM—

 

 

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...